Monday 15 February 2010

கண்ணீரும் கதை சொல்லும்

இரத்தத்தை விலைக்கு கேட்டான் சொத்து படைத்தவன் !
செத்துக்கொண்டிருக்கும் தாய்க்கு இரத்த தானம் கேட்டான் சேர்ந்துப்பழகியவன்
………………………………………………………………..
கண்ணீரும் கதை சொல்லும்
புலிகேசி
என்ன சுந்தரம் , முடிஞ்சா சொல்லு . இல்லாட்டா நட .
புரட்சி பதிப்பகம் பரசுராமன் குரல் கேட்டு சுயநினைவுக்கு வந்தான் சுந்தரத்தேவன். அவன் கண்களில் நீர் திரண்டது.
ஆத்திரமும் துக்கமும் கலந்து தொண்டையை அடைத்தது.அவனது கைகள் அவனையும் அறியாமல் மேசையிலிருந்த
காகிதக்கட்டை எடுத்தன.பரசுராமன் முகத்தை பார்க்கக்கூடவிரும்பாதவனாய் கண்களில் வழிந்த நீரை துடைத்தவாறே அந்த புரட்சி
பதிப்பகத்தை விட்டு அகன்றான்.
சுந்தரத்தேவன் மனம் குமுறியது.இரவும் பகலும் கண்விழித்து எழுதி முடித்த நானூறு பக்க கண்ணீரும் கதை சொல்லும் நாவலை முப்பது
ரூபாய்க்கு (1960 )அதுவும் யாரோ ஒரு சிறுகதைமன்னன் பெயரில் வெளியிட எந்த எழுத்தாளன் சம்மதிப்பான்.இந்த இழிச்செயலுக்கு விலை
பேச நா கூசவில்லையா .எத்தனை துணிவு.
கதிரவன் தன் கடமையை செவ்வனே செய்துகொண்டிருந்தான்.செங்கதிரோனின் இலட்சியப்பயணம் பகல் பன்னிரண்டு என்பதை . அறிவுருத்தியது.
சுந்தரத்தேவன் தன் குடிசைக்குள் நுழைந்தான்.அந்த குடிசையிலிருந்த கய்ற்று கட்டிலைத் தவிற அவனை எதிர்கொள்ள யாரும் இருப்பதாக
தெரியவில்லை. கீழே கிடந்த கிழிந்த பாயில் புத்தகங்களும் வெள்ளைக்காகிதங்களும் நிரம்பிக்கிடந்தன.நெடுந்தொலைவு நடந்த களைப்பு
அவனை உறக்கத்தில் ஆழ்த்தியது.
* * * * * * * * * * * * * *
சுந்தரா…
குரல் கேட்டு கண்விழித்தான் சுந்தரத்தேவன்.
வாசலில் நின்றுகொண்டிருந்தான் நண்பன் நாதமுனி.
வாடா என்ன திடீர் விஜயம் ! கண்களைக்கசக்கியவாரே நண்பனை வரவேற்றான் சுந்தரத்தேவன்.
சுந்தரா , அம்மாவுக்கு ரெண்டு மாசமா ஒடம்பு சரியாயில்ல.இன்னிக்கு டாக்டர் எழுதிக்கொடுத்த மருந்து வாங்க பணமில்ல.அவசியம் வாங்கிக் . கொடுக்க சொன்னார். காலேலருந்து அலையுறேன்.
கண்கலங்கினான் நாதமுனி.
சுந்தரத்தேவன் மனம் வெதும்பினான். பெற்றதாய் பெரும்பயணப்படுக்கையில்.உற்றமகன் கையறு நிலையில்.இதயத்தை துண்டாக பிளப்பது
போலிருந்தது.
நாதமுனி .கவலப்படாதே .ஒரு அஞ்சரை மணிக்கு வா .நான் ஏற்பாடு பண்றேன்.
நண்பனுக்கு விடைகொடுத்தான் சுந்தரத்தேவன்.
நாதமுனி சென்ற சில நொடிகளில் புரட்சிப்பதிப்பகத்தை நோக்கி நடந்தான் தேவன்..
படைப்பாளிகளின் இரத்தத்தை உறிஞ்சி கொழுக்கும் புரட்ச்சிப்பதிப்பகம் கம்பீரமாக காட்ச்சியளித்தது.
வாப்பா சுந்தரம்.நீ வருவேண்ணு நல்லா தெரியும்.
உள்ளே நுழைந்த தேவனை பரசுராமன் குரல் ஏளனம் செய்தது.
சுந்தரத்தேவன் மறுமொழி எதுவுமின்றி மூன்று மாதம் கண்விழித்து எழுதிய நாவலை முப்பது ரூபாய்க்கு நீட்டினான்.பரசுராமன் கொடுத்த
பத்திரத்தில் கையெழுத்திட்டு முப்பதுரூபாயை பெற்றுகொண்டான்.புரட்சி பதிப்பகத்தின் பெயர்ப்பலகை தேவனை பார்த்து நகைத்தது.
அவன் கண்களில் நீர் கசிந்தது.அந்த கண்ணீர் –
வெறுப்புக் கண்ணீரா அல்லது நட்புக்கு உதவும் ஆனந்த கண்ணீரா,
இப்போது கம்பீரமாக காட்ச்சி தந்தது புரட்சிபதிப்பக பெயர்பலகை அல்ல, சுந்தரத்தேவனே.
அல்லல் பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் செல்வத்தை தேய்க்கும் படை என்று பகர்ந்தான் பாவணன். — அவன் பாட்டின் பொருளைத் திருடி
வேறு புலவனின் சொற்களில் கவிதை படைக்கிறான். அவன் வயிறு நிறம்புகிறது.
————————————————————————————-
1962 – ல் கலைவேந்தன் மாதமிறுமுறை பல்சுவை இதழில் புலிகேசி என்ற பெயரில் முதல் முதலில் அச்சேரிய சிறுகதை.–பாண்டியன்ஜி
இடுகை 0009

Labels:

Sunday 7 February 2010

மொழி ஞாயிறு தேவநேய பாவணர்


மொழிஞாயிறு தேவநேய பாவணர் பிறந்த நாள்
பிறப்பு 07 - 02 - 1902 இறப்பு 15 - 01 - 1981
தாயார் - பரிபூரணம் அம்மையார். தந்தையார் - ஞானமுத்து
பிறந்த மண் - சங்கரநாயினார் கோயில் - கோமதிமுத்தாபுரம்
---------------------------------------
சென்னை அண்ணா சாலையில் ஆயிரம் விளக்கு பகுதியில் தென்திசை நோக்கி உயர்ந்திருக்கும் நூலகத்துக்கு தமிழகரசு தேவநேய பாவணர் மாவட்ட தலைமை நூலகம் என்று பெயர்சூட்டி மகிழ்ந்திருக்கிறது.
யார் அந்த தேவநேய பாவணர் ? - இன்றைய தலைமுறையினரில் பாவணரை அறிந்தவர் மிகச்சிலரே ! (பாவணரை அறிந்தவர்கள் அருள் கூர்ந்து பொறுத்து கொள்ளவும்.)
07 - 02 - 1902 ல் மதுரை - சங்கரநாயிநார் கோயிலை அடுத்த கோமதிமுத்தாபுரம் என்ற சிற்றூரில் பிறந்தவர் தேவநேய பாவணர்.தாயார் பரிபூரணம் அம்மையார் - தந்தையார் ஞானமுத்து அவர்கள். பாளயங்கோட்டை cmj பள்ளியில் துவங்கிய பள்ளிப்படிப்பு சென்னைவரை தொடர்ந்தது தமிழகத்தின் பல்வேறு பள்ளி கல்லூரிகளில் பணியாற்றிய பாவணர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்திலும் சேலம் அரசு கல்லூரியிலும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.தனித்தமிழ் இயக்கத்தில் தீவிர நாட்டம் கெண்ட பாவணர்1974 ல் பண்டித நேரு அரசில் அமையப்பெற்ற உலக தமிழாராச்சி கழகத்தில் இயக்குநர் பொறுப்பில் பணியாற்றினார்.பாவணர் தமிழில் பெரும்பாலான இலக்கியங்களை இதுவரை எவரும் பெருமளவில் முயலாத மொழியின் அடிப்படை கூறுகளை ஆய்ந்து பல் வேறு சான்றுகளை உறுதிசெய்தார்.சோம்பிக்கிடந்த தமிழினத்தை தட்டி எழுப்ப தனித்தமிழ் இயக்கங்களை தோற்றிவித்தவர் பாவணர். பிழைகள் மலிந்து கிடந்த தமிழ் அகரமுதலியை திருத்தி அன்னை தமிழுக்கு புத்துணர்வு ஊட்டியவர் பாவணர்.தூங்கிக்கிடந்த தமிழினத்தை ' நெருப்பாயிரு தமிழா நெருப்பாயிரு ! செருப்பாயிருந்தது போதும் ' என்று சினத்துடன் முழக்கமிட்டவர் பாவணர். அவரது தமிழ்பணி கண்டு தமிழ் கடல் மறைமலை அடிகள் வியந்து வாழ்த்தியதை கவனிக்கவேண்டும்.புரட்சி கவிஞர் பாரதிதாசனோ இவர் எந் தமிழர்க்கெல்லாம் வேந்து என்று கவிபாடியதை யார்தான் மறக்கமுடியும்.தனித்தமிழ் பால் நாட்டம் கொண்ட இயக்கங்களும் தமிழகரசும் பாவணர் பணிகண்டு பதக்கங்கள் கொடுத்து மகிழ்ந்தன. நடுவண அரசோ அனைத்துக்கும் மேலாக பாவணர் உருவினை அஞ்சல் தலையில் பொருத்தி தன்னைத்தானே உயர்த்திக்கொண்டது.
1902 - க்கும் 1981 - க்கும் இடையே 78 ஆண்டுகள் இந்த மண்ணில் வாழ்ந்த பாவணர் அன்னை தமிழுக்கு அளித்த ஆய்வு நூல்கள் எண்ணற்றவை. ஏறதாழ 78 ஆண்டுகள் இந்த மண்ணில் வாழ்ந்த பாவணரின் கடும் உழைப்பு தமிழுக்கு புத்துயிர் ஊட்டியது.உலகுக்கே மூத்த மொழி நம் தமிழ் என்ற முகவரியை கொடுத்தது. இறுதிவரை தனித்தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்ட பாவணர் தன் 78 வது வயதில் மதுரையில் மறைந்தார்.
தமிழகரசும் தமிழறிஞர்ககளும் தொடர்ந்து பாவணர் பகழ்பாடி வரினும் காலம் செல்லச்செல்ல பாவணர் நினைவு மங்கிவருதல் மறுக்க இயலாதது.
பாவணரின் பணி மொழியின் மூலகூறுகளில் இருந்ததாலும் தனித்தமிழ்பற்று தமிழரிடையே சுறுங்கி காணப்படுதலாலும் பாவணர் நினைவு மங்கிவருதற்கு தலையாய காரணம் என்று கருதுகிறேன்.
இருப்பினும் பாவணர் நினைவை ஒவ்வொரு தலைமுறைக்கும் விடாது தொடர் ஓட்டம் போல் கொண்டு செல்வது ஒவ்வொரு தமிழனின் தலையாய கடமை என்று கருதுகிறேன்.
---------------------------------------------------
பாவணரின் பிறந்த நாளன்று எழுதப்பெற்ற குறிப்புறை
கெள-டில்யன்
இடுகை 0008

Friday 5 February 2010

சொற் சுவை

ஒருமுறை அறிஞர் அண்ணாவைப் பார்க்க சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் அண்ணா இல்லத்துக்கு வந்திருந்தார்.
அண்ணா ம.பொ.சி க்கு விருந்தளிக்க எண்ணி அசைவ உணவுக்கு சொல்லி அனுப்பினார்.உடனே ம.பொ.சி அவசரமாக
'ஆட்டிறச்சி மட்டும் வேண்டாம் ' என்றார்.
'எதற்கு ? ' என்றார் அண்ணா.
'டாக்டர் கொலஸ்ட்ரல் (கொழுப்பு) ஜாஸ்த்தியா இருக்குண்ட்டார்.' என்றார் ம.பொ.சி.
உடனே அண்ணா நகைச்சுவையோடு
'அட, அந்த விஷயம் அவருக்கும் தெரிஞ்சி போச்சா ?' என்றார்.
------ சுப. வீ சொல்லக்கேட்டவர் கெள-டில்யன்
இடுகை
0007

Labels: , ,